Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்



மீண்டும் ஒரு புதிய ஆண்டு

நாம் சோர்ந்தாலும் எதுவும் நமக்காக நிற்கப் போவதில்லை

என்பதை உணர்த்தும் காலப் பாதையின் மற்றொரு மைல்கல்

புதிய கனவுகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய பொறுப்புகள்

தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக,

இந்நாட்டின் ஒரு குடிமகனாக

நம் பொறுப்பை மனதில் கொண்டு

புதிய உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும்

புத்தாண்டை எதிர் கொள்வோம்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tuesday, December 09, 2008

மனித உரிமை நாள் - பெனாசீர் கவுரவிக்கப் படுகிறார்

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப் பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த ஆண்டு முழுவதும் அது தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள், சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகள், மேலும் பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனித நாகரீகத்தின் பயனத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். அந்த பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை நடைமுறையாக்க இந்த மனித உரிமை நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.


இந்த ஆண்டிற்கான கருப்பொருள் " கெளவுரவமும், நீதியும் நம் அனைவருக்கும் ". உலகமிருக்கும் நிலவரத்திற்கு மிக பொருத்தமான கருப்பொருள்.

இந்நாளில் மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரப்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் 6 பேரை (5 தனி நபர், ஒரு நிறுவணம்) ஐநா சபை தேர்வு செய்திருக்கிறது. இதில் இறந்த பிறகு கொடுக்கும் பாஸ்துமஸ் (Posthumous) பரிசிற்காக இரண்டு பேர் தேர்ந்தெடுத்தப் பட்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தை நிலைநாட்ட ஏற்றுக் கொண்ட முயற்சியில் கொடூரமாக கொள்ளப்பட்ட பெனாசீர் பூட்டோ,
மற்றும் பிரேசில் நாட்டில் நிலபுலன்கள் இல்லாத பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடிய கன்னியாஸ்திரி சிஸ்டர். டோரதி ஸ்டாங்க் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. டோரதி ஸ்டாங்க் பல கொலை மிரட்டல்களுக்கு மத்தியுலும் தளராது தைரியமாக தான் ஏற்றுக் கொண்ட பணியை செய்து வந்தவர். இவர் கொல்லப்பட்ட போது நடந்த சம்பவத்தை கேட்டால், நாம் எல்லாம் எவ்வளவு சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என எண்ணத் தோன்றுகிறது. முன்று வருடங்களுக்கு முன்பு, அமேசான் காட்டுக்குள், அங்கு வாழும் பழங்குடியினருக்காக போராடிக் கொண்டிருந்த போது, இரண்டு பேர் துப்பாக்கியுடன் இவரை வழி மறித்தனர். அவர்கள் யாரால் எதற்காக அனுப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்த இந்த மூதாட்டி, அவர்களை அன்புடன் வரவேற்று, அமைதியாக 15 நிமிடங்கள் பேசி இருக்கிறார். அவரின் போராட்டத்திற்கு பின்னால் இருக்கும் நியாயத்தை விளக்கி இருக்கிறார். கையில் இருந்த ஒரு வரை படத்தை வைத்து பழங்குடியனருக்கு சொந்தமான நிலத்தை சுட்டி காட்டி இருக்கிறார். எந்த நியாயத்தையும் கேட்கிற மன நிலையில் வந்தவர்கள் இல்லை என்று தெரிந்ததும், கடைசியில் தன் கைப்பையில் இருந்த பைபிலை எடுத்து, " எனக்கு இருக்கும் ஒரே ஆயுதம் இது தான்" என்று கூறி ' "Blessed are the peacemakers, they shall be called children of God, Blessed are they who hunger and thirst for justice, for they shall be satisfied" என்ற வாசகத்தை படித்துக் கொண்டிருக்கும்போதே கொல்ல வந்தவர்கள் ஸ்டாங்கை 5 முறை சுட்டு விட்டு ஓடி விட்டனர். 79 வயதில் இப்படி ஒரு மன வலிமையா..ம்ம்ம்

இந்த பரிசை வாங்கப் போகும் மற்றவர்கள்...

ராம்சே க்ளார்க்: முதல்ல நம்ம ஹீரோ....:-))...யூ எஸ் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியவர். அமெரிக்க னித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கிலும் மரண தண்டனை முறை ஒழிக்கப்படுவதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், சதாம் மீதான வழக்கில் சதாமிற்கு ஆதரவாக வாதாடியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்தவர். உலகமயமாக்கல் என்பது சாதாரன மனிதனுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் ஊடுருவல் என்ற கருத்தை உடையவர். கொல்கத்தாவின் நந்திகிராமில் நடந்த கொடுமையின் போது அங்கு சென்று மக்களை நேரில் சந்தித்து நடந்ததை தெரிந்து கொண்டவர்.

மற்றொரு முக்கிய நபர் காங்கோ நாட்டை சேர்ந்த டாக்டர். டெனிஸ் முக்வெஜ். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களின் நலத்திற்காக ஒரு மருத்துவமனை நிறுவி தொண்டாற்றி வருபவர். இவரின் மருத்துவமனைக்கு இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் நாளொன்றிற்கு 10 பேர் வந்து போகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்து இலவசமாக சிகிச்சையும் அளித்து வருகிறார்.


ஜமாய்க்கா நாட்டில் மனித உரிமைக்காக போராடும் டாக்டர். கேரொலின் கோம்ஸ் க்கும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இவர் Jamaicans for Justice என்ற அமைப்பின் மூலம் ஜமாய்க்கா நாட்டில் நடக்கும் மனித உரிமை அத்து மீறல்களுக்கு எதிராக அரும்பணியாற்றி வருகிறார்.


ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற நிறுவனமும் இந்த ஆண்டு கவுரவிக்கப் படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்நிறுவனம் உலகம் முழுதும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை பதிவு செய்து, சில ஆக்கப்பூர்வமான பரிந்துறைகளை செய்து வருகிறது. மேலும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தை நிறுவ காரணமாக இருந்ததும் இந்நிறுவனம் தான்.

எல்லாம் சரி. உலக அளவில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை மறுப்பதிற்கில்லை என்றாலும் நாளுக்கு நாள் இந்த மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். வருடா வருடம் பெரிய அளவில், உலகம் முழுவதும் இந்த நாள் வெகு விமர்சையாக அனுசரிக்கப்படுவ தென்னமோ உண்மை. வாய் கிழிய பேசும் தலைவர்கள், அரசியல் ஆலோசகர்கள், சட்ட நிபுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என இந்நாளில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை சொல்பவர்கள் ஏராளம். ஆனால் இந்த கருத்து பரிமாற்றங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இந்தியாவைப் பொறுத்தவரை, (காவல் துறையை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்) ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சிறைக் காவலில் ஒவ்வொரு நாளும் நான்கு பேர் இறக்கின்றனர் என கூறியிருக்கிறது. ரவுடிகள் என்கெளவுன்ட்ரில் கொல்லப்படுவது சாதாரணமாகி வரும் இந்நாளில் அவர்களை உருவாக்குபவர்களை என்ன செய்ய முடிந்திருக்கிறது நம்மால். கொல்லப்பட்ட குற்றவாளிகள், ரவுடிகள், தாதாக்கள் என்ற காரணத்தால் அவர்களின் மரணமும், அவர்கள் கொல்லப்பட்ட விதமும் நம்முள்ளே எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பதும் உண்மைதானே. இது போல செயல்பாடுகளில் ஈடுபடும் காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், வீர பதக்கமும் கொடுத்து, மறுநாளே பெரிய வெற்றி விழாக்கள் கொண்டாடும் ஆட்சிகளையும் நாம் பார்த்துவிட்டோமே.

அதிகாரத்தை பயன் படுத்தி அவர்களை விசாரணையின்றி கொல்லுவது மற்றறொரு முக்கிய குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கை என்பது என் எண்ணம். திறைமறைவில் இருக்கும் சில பெரும்புள்ளிகளும் காவல் துறையும் சேர்ந்து அரங்கேற்றும் ஒரு நாடகம்.


இந்தச் சாவுகளில் எங்கே இருக்கிறது நீதியும் கெளரவுமும்.....ம்ம்ம்ம்

வாழ்க ஜனநாயகம்..!

Monday, December 01, 2008

உலக எய்ட்ஸ் தினம் 2008

Support World AIDS Day

சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் முதலிய வேறுபாடுகளை அறவே தவிர்த்திடுவோம்.... உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை

தெரிந்து தெளிவடைவோம்

தெளிவடைந்து கைகொடுப்போம்

நாம் கோரும் உரிமைகளை அனைவருக்கும் அளிப்போம்..

கோவையில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் தங்களுக்கென ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.