Sunday, October 01, 2006

Growing Old....

''அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்''
மருத்துவ துறையின் முன்னேற்றத்தாலும், ஆராய்ச்சியின் பயனாகவும், மனிதனின் ஆயுட்காலம் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. முப்பது களில் 32 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம் இன்று 64 ஆக உயர்ந்திருப்பது, இந்த நூற்றான்டின் ஒரு சாதனை. ஆனால் ஆயுட்காலம் அதிகரித்தால் மட்டும் போதுமா?
இந்த அவசர உலகத்தில, வேலை வாய்ப்பு, குழந்தைகளின் படிப்பு, வசதி வாய்ப்பு போன்ற காரணங்களால சொந்த ஊர விட்டு, அப்பா அம்மாவ விட்டு வேற ஒரு இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் நம்மில் பல பேருக்கு இருக்கு. புதிய சூழ்நிலையில நாம செய்யற சில compromises அவங்ககளால செய்ய முடியறது இல்லை.ஒரே ஊர்ல இருந்தாலும், குறைந்து கொண்டே இருக்கும் சகிப்புத்தன்மை இன்னிக்கு பல முதியோர் இல்லங்கள வளர்த்திருக்கு.
இங்க நான் ஒரு உண்மை சம்பவத்த சொல்றேன்..
ரவி, அவங்க வீட்ல ஒரே பிள்ளை. எங்களுக்கு தெரிந்து அவர் அவரோட அப்பாகிட்ட பேசினது இல்லை. அப்பாக்கு அளவுக்கு அதிகமான முன் கோபம். அம்மா ஒரு பள்ளியில் ஆசிரியை. நல்ல வசதியான குடும்பமானதால, அவங்க அம்மாக்கு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் இல்லை. ரவிய நல்லா கவனிச்சகனும்னு வேலைய ராஜினமா பண்ணீட்டு வீட்ல இருக்க ஆரம்பிசாங்க. ரவி படிப்ப முடிச்சுட்டு Oreital Insurance ல வேலைக்கு சேர்ந்தார். திருமணம் செய்துட்டு அப்பா அம்மாவோட நல்லா இருந்தார். சென்றமுறை கோவையில வேலை நிமித்தமா ஒரு முதியோர் இல்லத்துக்கு போக வேண்டி இருந்துச்சு. நல்ல வசதியானவங்க இருக்கும்,முதியோர் இல்லம். அங்க ரவியோட அம்மாவ பார்த்தேன். எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. "சரிபட்டு வரலை அதனால நானா ஒதுங்கிடேன்னு" சொன்னாங்க.. இங்க எனக்கு எந்த குறையும் இல்லைனும் சொன்னாங்க. இவங்களுக்கே இந்த நிலமைன்னா பேச்சு வார்த்தையே இல்லாம இருந்த அவங்க அப்பா எங்க இருக்கார்னு கேட்டேன்..அதற்கு அந்த தாய்,அவர் ரவி கூட தான் இருக்கார்னு சொன்னாங்க.. அவர் எல்லாத்தையும் சகிச்சுப்பார்.. என்னால முடியாது.. அதனால....இங்க வந்துடேன்னாங்க. என்னால நம்ப முடியலை..
எப்படியாவது ரவியவும் அவங்க அப்பாவையும் பார்கனும்னு அங்க போனேன்..ரவிய பார்த்து, எண்ணண்னா இது அம்மா அங்க இருகாங்க..நல்லாவா இருக்குன்னு கேட்டேன்... வாம்மா தாயே! நீ தான் பாக்கி, இத கேக்குறதுக்குதான் டெல்லியிலிருந்து வந்தியான்னு சலிச்சுட்டு..அம்மா கிட்டே எத்தனையோ சொல்லி பார்த்தேன்.. கேக்கலை னார்.. அவங்க அப்பாவ பார்க்க பயந்திட்டே அவர் அறைக்கு போனேன்.. அவர் சொன்னது தான் இன்னும் என் மசைல அப்பிடியே இருக்கு.. சின்ன வயசில அவனுக்கு அப்பாவா இருந்து நான் ஒன்னும் செய்யலை.. இப்ப பேரக் குழந்தைகளுக்கு நான் ஒரு நல்ல தாத்தாவா இருக்க ஆசை படறேன்... சில சங்கடங்கள் இருந்தாலும் அது எல்லாம் நான் பெரிசு பண்ண விரும்பலைன்னார்.. அறியா வயசில என்னை அவன் சகிச்சுட்டான்...இந்த வயசில நான் அனுசரிச்சு போகலைன்னா,நான் இருந்து பிரயோஜனம் இல்லைன்னார்.. நல்ல மருமக, துரு துருன்னு பேரக்குழந்த்தைகள்..இது எல்லாத்தையும் விடவா நம்ம கோவமும் பிடிவாதமும் முக்கியம்?..ஆனா சாந்தாக்கு (ரவியின் அம்மா) நாம இத்தன பண்ணோம் நம்ம பேச்சு கேக்கமாடேங்கறான்னு ஒரு கோவம்... எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.. அவ நிம்மதியா இருக்கா.. இருக்கட்டும்னு சொன்னார்.. 15 வருடத்திற்கு முன்ன இவர் கிட்ட நாங்க எல்லாம் பேச கூட பயந்துப்போம்.. அவரா இவர்னு ஆச்சிரியமா இருந்துச்சு... இப்பவும் ரவியும் அப்பாவும் அவ்வளவா பேசிக்கிறது இல்லை..ஆனா இரண்டு பேருக்கும் பாசம், பரிவு, மரியாதை இருகுங்கிறத உண்ர்ந்தேன்
ரவி, அவங்க அம்மா, இரண்டு பேர் கிட்டேயும் சகிப்புத்தன்மை இல்லை... பிள்ளைகள் பெரியவர்களான பின் வீட்டு பொறுப்ப அவங்ககிட்ட கொடுக்க சில பெற்றோருக்கு மனசு வருவதில்லை.. பிள்ளைகள், நில புலன்,வீட்டு பொறுப்பு என்று, எல்லாத்து மேலேயும் ஒரு possessiviness.
பிள்ளைகளும் ஒரு முடிவு எடுக்கும்போது மரியாதைக்காகவாவது பெரியவர்களை கேட்கவேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் முடிந்த அளவு நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டிருந்தால் அவர்களும் தாங்கள் தனிமை படுத்தப்பட்டதாக நினைக்க மாட்டார்கள்
இது எல்லாம் இன்னைக்கு எதுக்குன்னு கேக்கறீங்களா
முதியோர்கள் தினம்
Age does not protect some one from love,
but love to some extent protects us from age