Tuesday, August 28, 2007

உணர்வுகள் அற்ற நம் மக்கள்


NDTV மற்றும் Times Now சானலில் பார்த்த ஒரு செய்தியினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியாமல் இதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதை யார், எப்படி படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை.

மக்கள் சிலரின் மிருகத்தன்மையும், சக மனிதனின் பாதுக்காப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர் இரண்டு பேர் ஏவிய மனித உரிமை மீரலின் கொடுமையையும் படம் பிடித்து வேற காண்பித்தார்கள்.

காலையில் கையில் உணவை வைத்து கொண்டே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த செய்தியை பார்த்த பின் என்னால் உணவருந்த முடியவில்லை. எழுந்து விட்டேன். பீஹாரில் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துவிட்டு ஓட பார்த்தவனை பிடித்து உதைத்த காட்சியை கல் மணம் கொண்டவர்கள் கூட பார்க்க முடியாது.

அவர் கை பின்னால் கட்டப்பட்டிருந்தது, சுத்தியும் நின்று கொண்டிருந்தவர்கள் காலாலேயே அவரின் முகத்தில் உதைத்து சித்தரவதைப் படுத்தி, ஓட விட்டு பெல்ட்டால் உதைத்து, ஹ்ம்ம்ம்...என்னால் பார்க்க முடியவில்லை.

இதை எல்லாம் கேள்விப்பட்டு அங்கு வந்த காவல் தெய்வங்கள், கடமை உணர்வோடு தண்டனை கொடுக்க தயாரானார்கள். ஒரு பைக்கில் அந்த ஆளின் காலை கட்டி இழுத்து செல்ல...பின்னால் அந்த ஊர் மக்கள் அவரை உதைத்துக் கொண்டே செல்கிறார்கள்.

இதற்கும் பறித்த சங்கிலி மீட்கப்பட்டு விட்டது. இதற்கு பிறகும் அவருக்கு இவ்வளவு கொடுமை. மனித உரிமை மீறல் என்ற ஒன்று நம் காவல் தெய்வங்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே.

இப்பொழுது அவர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த பணி நீக்கம் என்ன பெரிதாக செய்துவிடப் போகிறது.

இதுவே நம்ம சன்ஜய் தத் சிறைய விட்டு வெளியே வந்தப்ப வெட்கம் கெட்டுப் போய் அவரை அனைத்து, கை கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொண்டார்கள் இதே காவல் தெய்வங்கள்.

இவர்களை திட்டக் கூட நா கூசுகிறது.

Monday, August 27, 2007

''Couvade syndrome'' - ஆண்களுக்கு வரும் மசக்கை

(டிஸ்கி - டாக்டரம்மா....நான் சொல்ற மேட்டர்ல தப்பிருந்தா கண்டுக்காம ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு விட்டுடுங்க.....சபையில் கால வாரி விட்டறாதீங்க.)

மாப்பிள்ளைகளெல்லாம் ஒரு உம்மைய சொல்லோனும். ..பொய் சொல்லாம, வெக்கப் படாம சொல்லனும். Yester year மாப்பிள்ளைகளுக்கெல்லாம் டைம் தர்ரேன் யோசிச்சு சொல்லுங்க.

இது தான் மேட்டர். தங்கமணி கருவுற்றிருக்கும்போது, இந்த மார்னிங்க் சிக்னஸ் னு சொல்லுவாங்களே அது உங்களுக்கும் இருந்துச்சா..

அட அமாங்க நெசமாத்தான். மனைவி கர்பமா இருக்கும் போது, மூனாவது வாரத்துல இருந்து கணவனுக்கும் இது மாதிரி '' morning sickness'' வரும்னு ஒரு கருத்து இருக்கு. இதுக்கு பேர் ''Couvade syndrome''. Couvade (to hatch) ஒரு ஃப்ரென்ச் வார்த்தை. ( இது தான் எங்களுக்கு தெரியுமேனு சொல்றவுங்க, உங்களுக்கு இப்படி இருந்துச்சானு மட்டும் சொல்லுங்க)

இது மேலை நாடுகள்ல தான் நிறைய இருக்குன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. அது எப்படி??....அப்ப நம்ம ஊர்ல ரங்கமணிக எல்லாம் தங்கமணிகள் மேல அக்கறை இல்லையா என்ன?...நீங்க தான் சாமி சொல்லோனும்.

Now jokes apart..இப்ப இந்த சின்றோம் இன் அறிகுறி என்னன்னு பார்க்கலாம். எடை கூடுதல், வயிறு குமட்டல், தூக்கம், அதிகமான பசி போன்ற மாற்றங்கள் கணவனுக்கு ஏற்படுமாம்.

இப்படி ஒன்னு இருக்குறத பலர் ஒத்துகறதில்லை. ஆனா ஆதாரத்துக்கு ஆராய்ச்சி முடிவுகள் பல இருக்கு. இதுல முக்கியமான விஷயம் பல நாட்கள் குழந்தைகள் இல்லாம இருந்து பிறகு இந்த பாக்கியம் கிடைத்த ஆண்களுக்கு இது மாதிரி பெரும்பாலும் நடக்கும்னு ஆராய்ச்சி சொல்லுது.

மனைவிக்கு கர்பகாலத்துல ஏற்படுற சில கஷ்டங்களைப் பார்த்து ஆண்களுக்கு மனசுல ஏற்படுற கலக்கம் தான் இதுக்கு அடிப்படை காரணம்னு கருதப்பட்டாலும்..இன்னும் நிறைய காரணங்கள் இருக்கு.

இந்த சிம்பதி பெயின் (Sympathy pain) உளவியல் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருந்தாலும் ஹார்மோன் மாற்றங்களும் இருக்கத்தான் செய்கிறது என்றும் சில ஆராய்ச்சிகள் சொல்லுது. உளவியல் அல்லாமல் உடலியல் மாற்றங்களினால் மட்டுமே ஏற்படக்கூடிய அறிகுறிகளும் பலருக்கு ஏற்படறதுனால இதுல ஹார்மோன்களுக்கும் பங்கு இருக்குன்னு சொல்றாங்க. தன்னோட வாரிசுங்குற ஒரு பெருமை, தானும் இதுல பங்கெடுத்துக்கனும்னு ஆசை இது போல பல காரணங்கள்.

ஆராய்ச்சியில கலந்துக்கிட்ட கணவன்மார்கள் '' எங்களுக்கும் இது மாதிரி மாற்றங்கள் ஏற்பட்டது பெருமையா இருக்குது'' ன்னு சொல்லி இருக்காங்க. இது மனைவிமார்களுக்கு தெரிய வரும்போது ரொம்ப சந்தோஷப் பட்டாங்களாம்.



இது பல ஆராய்ச்சியில நிருபனம் ஆகியிருந்தாலும் இதற்கான சரியான காரணம் ஒரு முடிவுக்கு வராமதான் இருக்கு.