Thursday, January 10, 2008

கண்டுபிடிச்சுட்டேன்...

மொக்கை போஸ்ட் எழுதனுமாம். லட்சுமி இத சொன்னப்போ நான் என்ன எழுதறதுன்னு கேட்டா, "அது தான் நேத்து போட்டீங்களே அது மாதிரி தான். சும்மா போடுங்க" னு சொல்ல.. ஓ அப்ப நாம நேத்து எழுதுனது மொக்கையா. அப்ப இதுக்கு முன்னாடி நாம எழுதனதுல எது இல்லாம் இதுல சேத்தின்னு நினச்சுட்டேன்.

யோசிக்காம எழுதுனா மொக்கை பதிவாம். ஒழுங்கா எழுதினாலே நாலு வரியில நாப்பது எழுத்துப்பிழை. இதுக்கு பெரிய மனசோட நம்ம கன் ஃபைட் காஞ்சனா பிழையே உன் பெயர் மங்கையானு ஒரு கேள்வி எல்லாம் கேட்டுட்டு போயிட்டாங்க. இதுக்கும் பதிவ நாலு தடவை படிச்சுட்டு பப்ளிஷ் பண்றப்பவே நம்ம அழகு இப்படி.

நாம என்னைக்கு யோசிச்சு பதிவு எழுதுனோம்னு நானும் யோசிச்சேன். ஹூம்...அப்படி ஒன்னு எழுதுனதா நியாபகத்துக்கு வரலை.

சரி. இந்த மொக்கை விளையாட்ட யாருங்க ஆரம்பிச்சது?

இதன் நோக்கம் என்னன்னு இந்த ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுட்டேன்... :-)))

நீங்க எழுதினது எல்லாமே இது வரைக்கும் மொக்கை தான்னு நம்ம ஒவ்வொருவரையும் நம்ம வாயாலேயே ஒத்துக்க வச்ச புண்ணியவான் வாழ்க. நாம எந்த அளவுக்கு நேர்மையானவங்கன்னு அவருக்கு புரிஞ்சிருக்கும்.:-)))

பி-கு- இது நாள் வரைக்கும் கிடைக்காத முதல் பரிசு இப்ப எனக்குத்தான்.. என்ன சொல்றீங்க??..மொக்கை பதிவுல எழுத்துப் பிழை எல்லாம் கண்டுக்க கூடாது ஆமா...

19 comments:

காட்டாறு said...

ஹா ஹா ஹா...

காட்டாறு said...

//இதன் நோக்கம் என்னன்னு இந்த ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுட்டேன்... :-)))
//

துப்பறியும் சாம்பா நீங்க?

//நீங்க எழுதினது எல்லாமே இது வரைக்கும் மொக்கை தான்னு நம்ம ஒவ்வொருவரையும் நம்ம வாயாலேயே ஒத்துக்க வச்ச புண்ணியவான் வாழ்க. நாம எந்த அளவுக்கு நேர்மையானவங்கன்னு அவருக்கு புரிஞ்சிருக்கும்.:-)))
//

இது... இது.. இது சூப்பர்

மங்கை said...

துப்பறியும் சாம்பா நீங்க?

:-)))

முயற்சி பண்ணிட்டு இருக்கேன்...

அபி அப்பா said...

:-))

துளசி கோபால் said...

இன்று 'முதல்' மொக்கைக்கு விளக்கம் கொடுத்த மங்கை என்ற 'பட்டப்பெயர்' அளித்து மகிழ்ந்தேன்...........


விஷயம் இவ்வளவு 'ஜிம்பிள்'னு தெரியாமப்போச்சே..........:-))))

Thekkikattan|தெகா said...

ஒஹோ, இதில இப்படியொரு சூழ்ச்சி இருக்குதுங்களா, ம்ங்கை...? எனக்கு காட்டாறு அலைப்பு விட்டிருந்தாங்க, இப்ப சிரிக்கிறதப் பார்த்தா தெரிஞ்சுப் போச்சு. :-))

நான் வரலை இந்த விளையாட்டுக்கு...

மங்கை said...

நன்றி அபிஅப்பா

துளசிக்கோவ்...வாங்க வாங்க..
இரவு 12 மணிக்கு பட்டம் பெற்ற 'முதல்'மங்கையும் நானே..நாமும் மகிழ்ந்தோம்..:-))

மங்கை said...

தெகா மொக்கை போடறது தான் ரொம்ப சிரமம்...ஆட்டைல சேருங்க..

பாச மலர் / Paasa Malar said...

மொக்கைன்னா இது மொக்கை..

தென்றல் said...

:)

டீச்சர்... பல பட்டங்கள் கொடுத்த (உ.தா: ""கன் ஃபைட் காஞ்சனா"....) மங்கைக்கே பட்டமா?

சரி... (மொக்கை)பதிவு எங்கங்க?

பெருசு said...

KRIS

கோபிநாத் said...

அக்கா நீங்க பாஸ் ஆகிட்டிங்க....

வாழ்த்துக்கள் ;))

பெருசு said...

அக்கோவ்

//யோசிக்காம எழுதுனா மொக்கை பதிவாம்//

இதுக்கு எவ்ளோ நேரம் யோசிச்சீங்க.

//இன்று 'முதல்' மொக்கைக்கு விளக்கம் கொடுத்த மங்கை என்ற 'பட்டப்பெயர்' அளித்து மகிழ்ந்தேன்...........//

துளசி டீச்சர் பயங்கர மொக்கை போட்டுடாங்க.

மொக்கையிலே "முதல்" மொக்கை எதுன்னு கண்டுபுடுச்சதுனாலே , அவுங்களுக்கும் மொக்கைக்கும் கண்டிப்பா சம்பந்தம் இருக்கணும்.

ஹி ஹி.

இரண்டாம் சொக்கன்...! said...

நடத்துங்க...நடத்துங்க....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆஹா இதுவல்லவோ மொக்கைடேக்குக்கு ஏத்த நல்ல மொக்கை பதிவு நானும் போட்டேனே... இப்ப சொல்றேன் நேத்து நீங்க போட்டது மொக்கையில்லவே இல்லை இன்னைக்கு போட்டது தான் மொக்கை.. கோபிகூட பாஸ் செய்தாச்சு பாருங்க.. நான் போட்டதை செல்லாதுன்னு சொல்லிட்டாங்க... என்ன இருந்தாலும் உங்க திறமை வராதுப்பா எனக்கு.. பி.கு எல்லாம் வச்சு சூப்பரா எழுதி இருக்கீங்க இந்த திறமை எல்லாம் இத்தனை நாளா எங்க ஒளிச்சி வச்சிருந்தீங்க..உங்களைப்போய் எயிட்ஸ் பத்தி எழுத ற பதிவர்ன்னும் சீரியஸ் பதிவர்ன்னும் முத்திரை குத்திட்டாங்களே ...

கண்மணி/kanmani said...

ஆத்தா என்னை டிஸ் குவாலிபை பண்ணீங்க ஆனா இது சூப்பர் மொக்கைதான்.
அடுத்து நம்ம ஆட்டத்துக்கு வாங்க
உங்க பெஸ்ட் எது சொல்லனும்[எல்லாமே னு சொன்னா ஒத்துக்கபடாது]
http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html

Sanjai Gandhi said...

//சரி. இந்த மொக்கை விளையாட்ட யாருங்க ஆரம்பிச்சது?//

ஹிஹி... நான் தான். ;P

//இதன் நோக்கம் என்னன்னு இந்த ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுட்டேன்... :-)))//

மெய்யாலுமாக்கா? இதை ஆரம்பிக்கும் போது நோக்கம் எல்லாம் ஒன்னும் இல்லீங்கோ. எனக்கு தெரிஞ்சது மொக்கை மட்டும் தான். அதான் ஆரம்பிச்சி வச்சேன். :)

//நீங்க எழுதினது எல்லாமே இது வரைக்கும் மொக்கை தான்னு நம்ம ஒவ்வொருவரையும் நம்ம வாயாலேயே ஒத்துக்க வச்ச புண்ணியவான் வாழ்க. நாம எந்த அளவுக்கு நேர்மையானவங்கன்னு அவருக்கு புரிஞ்சிருக்கும்.:-)))//

ஹிஹி.. danQ..danQ.. :P

குசும்பன் said...

ஓக்கே ரைட்டு! இது மொக்கை பதிவுக்கு முன்னுரைன்னு ஒத்துக்குறோம், உங்கள் மொக்கைக்காக வெயிட்டீங்.

Compassion Unlimitted said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
TC
CU