Monday, December 31, 2007

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...


கபடமில்லா இந்தச் சிரிப்பை போல் வரும் புத்தாண்டை தூய்மையான நெஞ்சோடு எதிர்கொள்வோம்

மனதில் அமைதியும், உடலில் வலிமையும், சிந்தனையில் தெளிவும் பெற்று, வாழ்வில் இன்னும் உயரங்களை அடைய எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்திக்குறேன்.

அனைவருக்கும் எதிர்வரும் புத்தாண்டு இனிமையாகவும் வளமையாகவும் அமைய, இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, December 28, 2007

பரீக்ஷித் - குறும்படம்

ரொம்ப நாளா குறும்படத்தை பற்றி பதிவு எழுதனும்னு நினச்சுட்டு இருந்தேன். படத்தை யூ ட்யூப்ல போட முயற்சி செய்தேன். முடியலை. அதனால படத்தில் இருந்து சில காட்சிகளை மட்டும் இங்கே குடுத்து இருக்கேன்.

கணவன் மூலமாக எச்ஐவி நோய்க்கு ஆளாகும் ஒரு பெண், கணவனின் வீட்டாரால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் அந்தப் பெண் கட்டிட வேலை செய்து குழந்தையை காப்பாற்றுகிறாள். மேலும் அவளுடன் கூலி வேலை செய்யும் பெண்களுக்கு எச்ஐவி பற்றி எடுத்து கூறி, கர்ப்பமாக இருக்கும் பெண்கள், கண்டிப்பாக எச்ஐவி டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக் கூறுகிறாள்.

விழிப்புணர்வு கூட்டங்களில் போட்டு காட்டவேண்டிய படமானதால் பெரும்பாலும் எச்ஐவி பற்றிய அடிப்படைத் தகவல்கள், பாதிக்கப்பட்டவர்கள் படும் கஷடங்கள் போன்றவை எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது.

முப்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்ல எடுத்த படம். நான் எதிர் பார்த்த அளவிற்கு வரலைன்னாலும், படத்திற்கான குறிக்கோள் நிறைவேறியாச்சு.

நாமும் ஏதோ செய்திருக்கோம்னு ஒரு திருப்தி.


எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அம்பாவாக நடித்த சாகரீக்கா- நிறைவான நடிப்பு

தம்லியாக நடித்த கீதா, அசத்தீட்டார்

தான் கர்ப்பமாக இருப்பதை கணவனிடம் சொல்லும் அம்பா
அடிக்கடி நோய்வாய்ப்படும் கணவனாக நடித்த ஜீத்து.


டாக்கடராக நடித்த சந்தீப் ஆர்யா



வில்லி மாமியார்.. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய பெண் வராததால், மேக்அப் வுமன் பிரியா, மாமியாராக ஒரே காட்சியில் வந்தாலும் அசல் வில்லி தோற்றும் போகனும். அப்படி ஒரு லுக்கு.



வீட்டை விட்டு விரட்டப்பட்ட அம்பா, தெருவில் குழந்தையுடன்



டாக்டரம்மாவாக நடித்த ரிது ஆர்யா



உண்மையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பத்மாவதி


பகவதி

நல்ல படியாக குழந்தையை பெற்றெடுத்த சந்தோஷதத்தை அம்பாவிடம் பகிர்ந்து கொள்ளும் தம்லி.


Tuesday, December 11, 2007

என் அருகே நீ இருந்தால்!


தானாய் வந்த அன்பு
தாராளமாய் வந்த அன்பு
தவிக்க விடாத அன்பு
தெவிட்டா அன்பு

தவித்திருந்தேன் விழித்திருந்தாய்
தோல்வியில் உறைந்திருந்தேன் தோளானாய்
தோள் கொடுப்பதில் தனையனானாய்
தேற்றி அரவணைத்து தந்தையானாய்

பொறுமையில் என் தாயானாய்
மறுக்காமல் என்னை வழி நடத்தும் வழித்துணையானாய்

இந்த அன்பிடம் தஞ்சமடைந்தேன் என் நட்பே....

காணாது கண்ட உன் அன்புடனே, என் அருகே நீயுமிருந்தால்.....!

பி. கு- இங்க பாருங்க எல்லாரும், படிச்சிதும் நல்ல பிள்ளைக்கு அழகா ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க...இல்லன்னா தினமும் ஒரு கவிதை வரும் சொல்லிட்டேன்..அப்புறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை....