
மக்கள் சிலரின் மிருகத்தன்மையும், சக மனிதனின் பாதுக்காப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர் இரண்டு பேர் ஏவிய மனித உரிமை மீரலின் கொடுமையையும் படம் பிடித்து வேற காண்பித்தார்கள்.
காலையில் கையில் உணவை வைத்து கொண்டே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த செய்தியை பார்த்த பின் என்னால் உணவருந்த முடியவில்லை. எழுந்து விட்டேன். பீஹாரில் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துவிட்டு ஓட பார்த்தவனை பிடித்து உதைத்த காட்சியை கல் மணம் கொண்டவர்கள் கூட பார்க்க முடியாது.
அவர் கை பின்னால் கட்டப்பட்டிருந்தது, சுத்தியும் நின்று கொண்டிருந்தவர்கள் காலாலேயே அவரின் முகத்தில் உதைத்து சித்தரவதைப் படுத்தி, ஓட விட்டு பெல்ட்டால் உதைத்து, ஹ்ம்ம்ம்...என்னால் பார்க்க முடியவில்லை.
இதை எல்லாம் கேள்விப்பட்டு அங்கு வந்த காவல் தெய்வங்கள், கடமை உணர்வோடு தண்டனை கொடுக்க தயாரானார்கள். ஒரு பைக்கில் அந்த ஆளின் காலை கட்டி இழுத்து செல்ல...பின்னால் அந்த ஊர் மக்கள் அவரை உதைத்துக் கொண்டே செல்கிறார்கள்.
இதற்கும் பறித்த சங்கிலி மீட்கப்பட்டு விட்டது. இதற்கு பிறகும் அவருக்கு இவ்வளவு கொடுமை. மனித உரிமை மீறல் என்ற ஒன்று நம் காவல் தெய்வங்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே.
இப்பொழுது அவர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த பணி நீக்கம் என்ன பெரிதாக செய்துவிடப் போகிறது.
இதுவே நம்ம சன்ஜய் தத் சிறைய விட்டு வெளியே வந்தப்ப வெட்கம் கெட்டுப் போய் அவரை அனைத்து, கை கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொண்டார்கள் இதே காவல் தெய்வங்கள்.

இவர்களை திட்டக் கூட நா கூசுகிறது.