ஒரு பள்ளியில் ஆசிரியருக்காக குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
கடந்த சில ஆண்டுகளில் நம் நாடு கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்களை கண்டிறிருக்கிறது. இதில் முக்கியமான முன்னேற்றம் என்று சொன்னால், தொடக்கப் பள்ளியில் சேர்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது தான். 6-14 வயதுடைய சுமார் 200 மில்லியன் குழந்தைகளில் 80% குழந்தைகள் ஏதாவது ஒரு கல்வி முறையில் (விதிமுறையான-formal அல்லது முறைசாரா-non-formal education) சேர்ந்து படித்து வருகிறார்கள்.
அனால் ஒரு முழுமையான கல்வி தொழில்நுட்ப கொள்கை இல்லாத காரணத்தால், இன்று கல்வியின் தரம் வேண்டிய அளவு உயரவும் இல்லை, முழுமையாக கடைநிலை மக்களை போய் சேரவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்த புதிய தொழில் நுட்பங்களின் அவசியத்தையும் நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை. இதன் காரணமாக அரசு மேற்கொள்ளும் பல் வேறு திட்டங்கள் பயனில்லாமல் போகிறது.
குழந்தைகளின் சேர்க்கை தொடக்க கல்வியில் அதிகரித்திருந்தாலும், இவர்களில் 52% பேருக்கு, 8 ஆம் வகுப்பிற்கு பின்னர் படிப்பை ஏதாவது ஒரு காரணத்தினால் தொடரமுடியாமல் போகிறது. மீதம் இருக்கும் 48% குழந்தைகளின் attendance rate சராசரியாக 75% தான். அரசின் கணக்கெடுப்புப்படி 5ஆம் வகுப்பு வரை தேறும் மாணவர்களில் 28% பேர் தான் பாடங்களில் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். மற்றவர்களின் கல்வி தரம் கவலை அளிக்ககூடியதாகவே இருக்கிறது. தொண்டு நிறுவணம் ஒன்று மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின் மூலம் 7-14 வயதிற்கு உற்பட்ட மாணவர்களில் 35% பேருக்கு பாடத்தில் ஒரு சாதாரண பத்தியை கூட படிக்க முடிவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இத்தனை நிதி ஒதுக்கீடு செய்து, திடங்கள் வகுத்து, அதில் இத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று மார் தட்டி என்ன பயன்.
நம் கல்வியின் தரம் திருப்தியாய் இல்லாததற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வகுப்பில் அளவுக்கு அதிகமான மாணவர்களும் ஆசிரியர் பற்றாக்குறையும் முக்கியமான காரணங்கள்.நம் நாட்டின் சராசரி ஆசிரியர் மாணவன் விகிதம் 40:1 ஆக இருந்தாலும், பீஹார் போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் 84:1 ஆகவே இருக்கிறது. பள்ளிகளுக்கு குழந்தைகள் வந்தாலும், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவருகிறது சில பள்ளிகள்.14% தொடக்க பள்ளிகளும் 3% உயர் தொடக்க பள்ளிகளும் ஒரே ஒரு ஆசிரியிராலேயே நிர்வகித்து நடத்தப்பட்டு வருகிறது.சராசரியாக 70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமே பல பள்ளிகள் இயங்கி வருகிறது.இதிலிருந்து அங்கு பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளில் நம் நாடு கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்களை கண்டிறிருக்கிறது. இதில் முக்கியமான முன்னேற்றம் என்று சொன்னால், தொடக்கப் பள்ளியில் சேர்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது தான். 6-14 வயதுடைய சுமார் 200 மில்லியன் குழந்தைகளில் 80% குழந்தைகள் ஏதாவது ஒரு கல்வி முறையில் (விதிமுறையான-formal அல்லது முறைசாரா-non-formal education) சேர்ந்து படித்து வருகிறார்கள்.
அனால் ஒரு முழுமையான கல்வி தொழில்நுட்ப கொள்கை இல்லாத காரணத்தால், இன்று கல்வியின் தரம் வேண்டிய அளவு உயரவும் இல்லை, முழுமையாக கடைநிலை மக்களை போய் சேரவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்த புதிய தொழில் நுட்பங்களின் அவசியத்தையும் நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை. இதன் காரணமாக அரசு மேற்கொள்ளும் பல் வேறு திட்டங்கள் பயனில்லாமல் போகிறது.

குழந்தைகளின் சேர்க்கை தொடக்க கல்வியில் அதிகரித்திருந்தாலும், இவர்களில் 52% பேருக்கு, 8 ஆம் வகுப்பிற்கு பின்னர் படிப்பை ஏதாவது ஒரு காரணத்தினால் தொடரமுடியாமல் போகிறது. மீதம் இருக்கும் 48% குழந்தைகளின் attendance rate சராசரியாக 75% தான். அரசின் கணக்கெடுப்புப்படி 5ஆம் வகுப்பு வரை தேறும் மாணவர்களில் 28% பேர் தான் பாடங்களில் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். மற்றவர்களின் கல்வி தரம் கவலை அளிக்ககூடியதாகவே இருக்கிறது. தொண்டு நிறுவணம் ஒன்று மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின் மூலம் 7-14 வயதிற்கு உற்பட்ட மாணவர்களில் 35% பேருக்கு பாடத்தில் ஒரு சாதாரண பத்தியை கூட படிக்க முடிவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இத்தனை நிதி ஒதுக்கீடு செய்து, திடங்கள் வகுத்து, அதில் இத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று மார் தட்டி என்ன பயன்.
நம் கல்வியின் தரம் திருப்தியாய் இல்லாததற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வகுப்பில் அளவுக்கு அதிகமான மாணவர்களும் ஆசிரியர் பற்றாக்குறையும் முக்கியமான காரணங்கள்.நம் நாட்டின் சராசரி ஆசிரியர் மாணவன் விகிதம் 40:1 ஆக இருந்தாலும், பீஹார் போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் 84:1 ஆகவே இருக்கிறது. பள்ளிகளுக்கு குழந்தைகள் வந்தாலும், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவருகிறது சில பள்ளிகள்.14% தொடக்க பள்ளிகளும் 3% உயர் தொடக்க பள்ளிகளும் ஒரே ஒரு ஆசிரியிராலேயே நிர்வகித்து நடத்தப்பட்டு வருகிறது.சராசரியாக 70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமே பல பள்ளிகள் இயங்கி வருகிறது.இதிலிருந்து அங்கு பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்.
இதில் இன்னொரு வேடிக்கை. உலக வங்கியும், ஹார்வர்ட் பல்கலைகழகமும் சேர்ந்து நடத்திய ஒரு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, 3700 ( அரசு மற்றும் தனியார் பள்ளிகள்) பள்ளிகளுக்கு முன் அறிவிப்பின்றி சென்று சோதனை செய்த போது, 20ல் இருந்து 25 சதவீத ஆசிரியர்கள்களே பள்ளியில் இருந்திருக்கிறார்கள். அப்படியே பள்ளிக்கு வந்தாலும், வந்தவர்களில் 20% பேர் பாடம் எடுப்பதில்லையாம்.இதை எல்லாம் அதிகாரிகள் கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.
அடிப்படை வசதிகளான குடி தண்ணீர், கழிப்பறைகள் போன்றவை சில பள்ளிகளுக்கு இன்னும் ஒரு கணவாகவே இருந்து வருகிறது. 16% பள்ளிகளில் குடி தண்ணீர் வசதி கூட இல்லாமல் இயங்கி வருகிறது. 51% கழிப்பறைகள் இல்லாமல் இருக்கின்றன. மற்றொரு உண்மை 7% பள்ளிகள் கரும்பலகை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல.
இது போல வசதியின்மை காரணிகளாக இருந்தாலும் போதிய பயிற்சி பெறாத ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் அடிக்க கையில் குச்சியுடன் திரியும் ஆசிரியர்களை நாம் பார்கிறோம்.32% ஆசிரியர்கள் போதிய பயிற்சி இல்லாமலே ஆசிரியர் பணிக்கு வருகிறார்கள். அடிப்படை பயிற்சி இல்லாத இவர்களிடம் தரமான கற்பித்தலை எவ்வாறு நாம் எதிர்பார்க்கமுடியும்?. உண்மையில் நல்ல திறமையும் ஆர்வமும் உள்ள பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.
ஒரேமாதிரியான, விறுவிறுப்பில்லாத கற்பித்தல் மாணவர்களை படிப்பில் ஆர்வமில்லாமல் செய்துவிடுகிறது.செயற்திறனும் பயனும் உள்ள தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணலாம்
அடிப்படை வசதிகளான குடி தண்ணீர், கழிப்பறைகள் போன்றவை சில பள்ளிகளுக்கு இன்னும் ஒரு கணவாகவே இருந்து வருகிறது. 16% பள்ளிகளில் குடி தண்ணீர் வசதி கூட இல்லாமல் இயங்கி வருகிறது. 51% கழிப்பறைகள் இல்லாமல் இருக்கின்றன. மற்றொரு உண்மை 7% பள்ளிகள் கரும்பலகை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல.
இது போல வசதியின்மை காரணிகளாக இருந்தாலும் போதிய பயிற்சி பெறாத ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் அடிக்க கையில் குச்சியுடன் திரியும் ஆசிரியர்களை நாம் பார்கிறோம்.32% ஆசிரியர்கள் போதிய பயிற்சி இல்லாமலே ஆசிரியர் பணிக்கு வருகிறார்கள். அடிப்படை பயிற்சி இல்லாத இவர்களிடம் தரமான கற்பித்தலை எவ்வாறு நாம் எதிர்பார்க்கமுடியும்?. உண்மையில் நல்ல திறமையும் ஆர்வமும் உள்ள பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.
ஒரேமாதிரியான, விறுவிறுப்பில்லாத கற்பித்தல் மாணவர்களை படிப்பில் ஆர்வமில்லாமல் செய்துவிடுகிறது.செயற்திறனும் பயனும் உள்ள தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணலாம்
கல்வித்துறை நிர்வாகத்தில் நிலவும் பொறுபற்ற தன்மை,அலட்சியம் ஆகியவை மாறவேண்டும். தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், தகுதியும் ஆர்வமும் மிக்க இளைஞர்களை கொண்டு திட்டங்கள் வகுத்து செயல்பட்டால் இந்தியாவின் கல்வித்தறம் உலக அளவில் முதன்மை பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.