Wednesday, April 21, 2010

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

நிர்பந்தங்கள் அற்ற நேசங்களை நினைவில் கொண்டு....இதோ இந்த பாடல்




இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
வசந்த்தின் மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

Saturday, April 17, 2010

'துஜ் சே நாராஸ் நஹி ஜிந்தகி'

1983 ல் வெளி வந்த மாசூம் படத்தில் அனைத்து பாடல்களும் நெஞ்சை உருக்குபவை. சேகர் கபூர் முதன் முதலில் இந்தியில் இயக்கிய படம். தமிழில் பிரபு, அமலா மற்றும் சரிதா நடித்து வெளிவந்தது. மனதை தட்டி எழுப்பும் குல்சாரின் வரிகளை கொண்டது.

இந்தப் படத்தில் வரும் 'துஜ்சே நாராஸ் நஹி ஜிந்தகி' என்ற பாடலை ஜி டீவி யில் நடந்த சரிகமப நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த அமானத் அலி பாடினார். இந்த போட்டி நடந்து பல நாட்கள் ஆகிவிட்டன.

கீழே உள்ள வீடியோ படத்தில் அனூப் கோஷல் பாடியது.

மேலே உள்ள வீடியோ போட்டியில் அமானத் அலி பாடியது.

சிலர் பாடும் போது காதுகள் வழியே இறங்கி இதயத்தை உலுக்குகிற மாதிரி ஓர் உணர்வு ஏற்படும். ஏதொ ஒரு சக்தி நம்மை இழுத்து உட்கார வைக்கும். இந்த இளைஞன் பாடியதை கேட்ட போது நானும் இதை தான் உணர்ந்தேன். பாடல் வரிகளும், அவன் பாடிய விதமும், வெளிபடுத்திய உணர்ச்சிகளும் மனதை பிசையாமல் இல்லை. கண்ணில் கண்ணீரை வரவழைக்கும்.


அரங்கில் இருந்தவர்கள் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று கூறி மூன்று தடவை பாடவைத்தனர். எத்தனை முறை கேட்டாலும் அதே உணர்வை ஏற்படுத்தும் குரல்.

இரண்டையும் கேட்டு பாருங்கள்...அமானத்தின் குரல் ஏற்படுத்தும் ஜாலம் புரியும்







tujhase naaraaz nahi zindagi, hairaan hoon main
o hairaan hoon main
tere masoom savalon se pareshaan hooN main
o pareshaan hoon main

jeene ke liye socha hi na tha, dard sambhalane honge
muskuraoon to, muskurane ke karz utaarne honge
muskuraoon kabhi to lagata hai
jaise hontonn pe karz rakhaa hai
tujhase ...

aaj agar bhar ayi hai, boondein baras jaayengi
kal kya pata inke liye aakhen taras jayengi
jaane kahan gum kahan khoya
ek aansu chhupake rakha tha
tujhase ...

zindagi tere gum ne hamain rishte naye samajhaye
mile jo hamain dhoop main mile chhaanv ke thande saaye

o tujhase ..